79வது நாளாக தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் 79 வது நாளாகவும் இன்று(09) தொடர்கின்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் எவ்வித தீர்வுகளுமின்றி தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த போராட்டம் இரவு பகலாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.