வவுனியாவில் இளைஞன் அடித்துக்கொலை ( படங்கள் இணைப்பு)
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் 11ஆம் ஒழுங்கையில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடகைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் 25வயதுடைய குடும்பஸ்தர் இன்று 11.01.2017 பிற்பகல் 3.00மணியளவில் முன்வீட்டில் வசித்து வந்தவர்கள் சிலர் குழுவாக மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் அவ்விடத்தில் காணப்படுகின்றது. பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.