வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் மாதா சிலை விசமிகளால் உடைப்பு
வவுனியா உக்குளாங்குளம் சிவன் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மாதா சிலை நேற்று (23.10.2017) இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக ஆலயங்கள் , தேவாலயங்களின் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.