வீதிப் பிரச்சினைக்கு நீதி வேண்டி புலோப்பளை பிரதேச மக்கள் அமைதிப்பேரணி
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் புலோப்பளை பிரதான வீதி பல ஆண்டுகளாக புனரைமைக்கப்படாது இருப்பதனை சுட்டிக்காட்டியும் இதற்கான தீர்வினைக் கோரியும் புலோப்பளை பிரதேச மக்கள் ,மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து இவ் அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்
இன்று காலை நடைபெற்ற இப் பேரணியில் புலோப்பளையில் இருந்து அமைதியான முறையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்த மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகயர் ஒன்றினை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்
இதன் போது கருத்துத் தெரிவித்த கிராம மக்கள் புலோப்பளைகிழக்கு,புலோப்பளை மேற்கு,அல்லிப்பளை,அறத்திநகர்,ப
பெரியபளை,கச்சார்வெளி,முல்லையடி
இது தொடர்பில் மக்களுக்கு கருத்துத் தெரிவித்த பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப.ஜெயராணி
குறித்த வீதி தொடர்பில் கடந்த கால அபிருத்திக் குழுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் இவ் வீதி. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி என்பதால் அவர்களுடனும் பேசப்பட்டது இவ் வீதி புனரமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வருகின்ற வருட இறுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.