வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் கேப்பாப்புலவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில்
வவுனியாவில் இன்று 20.02.2017 காலை 8.00 தொடக்கம் 9.00மணிவரை கோவிற்குளம் இந்துக்கல்லூரி, தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியலாயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாயம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து தமது பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.