பிறந்த குழந்தையை குழி தோண்டி புதைத்த தாய்: கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த குழந்தையை குழி தோண்டி புதைத்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 5 நாட்களிற்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர், வீட்டில் பிரசவித்த குழந்தையை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண் கொழும்பில் ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதாகவும், குறை மாதத்தில் பிறந்த குழந்தை இறந்து பிறந்த நிலையில் குழந்தையை இவ்வாறு குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பொலிசார் விசாரணைகளை துரிதப்படுத்த உள்ளனர்.