கிளிநொச்சியில் 18ஆவது நாளாக தொடரும் போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 18ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20.02.2017 அன்று காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.