உயிலங்குளம் ஐம்பது வீட்டுத்திட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லை : மக்கள் விசனம்
முல்லைத்தீவு, துணுக்காய் உயிலங்குளம் ஐம்பது வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றன என்றும் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள உயிலங்குளம் கிராமத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணிகளற்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றம் விசேட தேவைக்குட்பட்டோர் என 50 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது தாங்கள் இங்கு குடியேறி நான்கு வருடங்களாகியும் இன்று வரை ஒரு பகுதியினர் தமக்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்படவில்லை எனவும் தமக்கான மின் இணைப்பை விரைவாக ஏற்படுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைவிட தினமும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் பிரதான வீதிமுதல் குடியிருப்பு வீதிகள் வரை எந்தவீதிகளும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதுடன் தண்ணீர் வசதி முன்பள்ளி வசதிகள் பாடசாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்மையால் இங்கு குடியிருக்கின்ற 50 குடும்பங்களில் 28 வரையான குடும்பங்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளன.
இந்த நிலையில் மேற்படி மாதிரிக் கிராமத்தின் அடிபபடை வசதி வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.