கிளிநொச்சியை சேர்ந்த செல்வராணி அவர்களுக்கு தேசிய சேவை மேன்மை விருது-2016
இலங்கையில் இந்துசமய அறநெறிக் கல்விக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்களை தெரிவு செய்து வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் தேசிய சேவை மேன்மை விருது-2016 கிளிநொச்சி மாவட்டத்தில் ஓய்வு நிலை சைவசமய ஆசிரிய ஆலோசகரான திருமதி சோமசேகரம் செல்வராணி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் கொழும்பு பம்பலபிட்டி கதிரேசன் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே கிளிநொச்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சோ. செல்வராணி அவர்களுக்கு அவரின் அறநெறிக் கல்விசேவையை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.